பொலிஸ் சார்ஜன்டின் 3 மாடுகளைத் திருடிய அதிரடிப்படையின் முன்னாள் வீரர் தலைமையிலான மூவர் கொண்ட குழு கைது!


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கொஸ்கொட தாரகவின் நெருங்கிய உறவினர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இராணுவ விசேட அதிரடிப்படையின் முன்னாள் வீரர் ஒருவரின் தலைமையிலான மாடு திருடும் குழுவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மாடுகளைத் திருட பயன்படுத்திய வாகனம் , முச்சக்கரவண்டி, வாள், பல இலக்கத் தகடுகள், மாடுகளைப் பிடிப்பதற்குப் பயன்படுத்திய சாதனம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹொரணையில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சுமார் 14 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று மாடுகள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விசாரித்து கைது செய்யுமாறு பாணந்துறை பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அங்குருவத்தோட்ட பொலிஸாருக்கு வழங்கிய உத்தரவின் பிரகாரம் திட்டமிட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.